2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வன்னி மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை இராணுவம் சிதைக்கிறது: த.தே.கூ

Menaka Mookandi   / 2013 ஜூன் 13 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'வன்னியின் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை இராணுவம் சிதைத்து வருகின்றது' என்று நாடாளுமனற் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'வன்னியில் பாடசாலைகளில் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாத நிலை காணப்பட்டு வருகின்றது.

நாள் தோறும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கவோம் என்று சொல்லி மாணவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது' என்றும் சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

'தந்தையின் பெயர் முன்னுக்கு வரவெண்டும் பிள்ளையின் பேர் பின்னுக்கு வரவேண்டும் என்று நாள் தோறும் இராணுவத்தினர் பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்மை பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் வருடத்தில் 365 நாட்களும் இராணுவத்தின் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இது இவ்வாறு இருக்க மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை எவ்வாறு முன்னெடுக்க முடியும் இராணுவத்தின் இந்த செயற்பாட்டுக்கு கிளிநொச்சியில் காட்டாட்சி நடத்திவரும் சந்திரகுமாரும் காரணம் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என்றார்.

'விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில்; கிளிநொச்சி நகரம் சர்வதேச ரீதியில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்துள்ளது. இதனை சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் காட்டுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் முயற்சிக்கின்றது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .