2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வடமாகாண சபையினால் மரநடுகை

Menaka Mookandi   / 2013 ஜூன் 14 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வடமாகாண சபையினால் இன்று வெள்ளிக்கிழமை யாழ். பழைய பூங்கா வளாகத்தில் மரநடுகைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, பிரதம அதிதியாக கலந்துகொண்டு மர நடுகையினை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதால் ஏற்படுகின்ற நன்மை தீமைகள் குறித்தும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும், சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வில், யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர், வடமாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள், சுகாதரா பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .