2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் தனியார் கல்வி நிறுவன கொட்டகை விசமிகளால் எரிக்கப்பட்டது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 25 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கனகராஜ்
 
யாழ். நெல்லியடி விக்னேஸ்வராக் கல்லூரி வீதியில் அமைந்திருக்கும் தனியார் கல்வி நிறுவன கொட்டகை நேற்று வியாழக்கிழமை (24) இரவு 10.30 மணியளவில் விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
 
இது பற்றி தெரியவருவதாவது,
 
மேற்படி பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கொட்டகை நேற்றிரவு (24) எரிந்துகொண்டிப்பதினை அவதானித்த அயலவர்கள், கல்வி நிறுவன உரிமையாளருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியதுடன், தீயினை அணைக்கவும் முயன்றனர்.
 
இருந்தும் கல்வி நிறுவனத்தின் ஒரு கொட்டகை முழுமையாக எரிந்து சாம்பராகியது.
 
அவ்விடத்திற்கு வந்த உரிமையாளர் உடனடியாக அவசரப் பொலிஸாரை அழைத்தார்.
 
சம்பவ இடத்திற்கு வந்த நெல்லியடிப் பொலிஸார் எரிந்த கொட்டகையினைப் பார்வையிட்டதுடன், இனந்தெரியாத நபர்கள் தீக்குச்சி மூலம் தீ வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .