2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யுவதியை காணவில்லை என முறைப்பாடு

Super User   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், சுமித்தி தங்கராசா

யுவதி ஒருவர் காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு குறித்த யுவதியின் தந்தையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சுவேலி மேற்கு கொலணியை சேர்ந்த 23 வயதான இரவீந்திரராஜா நிஸாந்தினி என்ற யுவதி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமற் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி வைத்தியசாலைக்கு மருந்து எடுக்கச் சென்ற யுவதி இதுவரையிலும் வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .