2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அமைச்சரின் உறுதிமொழியினை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடல்

Super User   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சுமித்தி தங்கராசா


வட மாகாண சுகாதார அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து சுகாதார தொண்டர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வட மாகாண சுகாதார அமைச்சிற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் சுகாதார தொண்டர்களாக 1998ஆம் ஆண்டு தொடக்கம் கடமையாற்றி வரும் யாழ். மாவட்டத்தை 150 தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களைச் சந்தித்த வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம், 150 பேருக்கு ஒட்டுமொத்தமாக நியமனம் வழங்க முடியாது என்றார்.

அத்துடன் தேவையின் அடிப்படையில் விரைவில் நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார தொண்டர்களுக்கு மாகாண அமைச்சர் உறுதியளித்தாhர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .