2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அனுமதியின்றி பிடிக்கப்பட்ட சிங்கி இறால்கள் கடலில் விடப்பட்டன

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ். காங்கேசன்துறையில் அனுமதியின்றி பிடிக்கப்பட்ட சிங்கி இறால்களை வைத்திருந்த நபருக்கு ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மல்லாகம் நீதிமன்றம் அவரிடமிருந்த சிங்கி இறால்களை கடலில் மீண்டும் விடுமாறும்; உத்தரவிட்டுள்ளது.

காங்கேசன்துறை கடலில் அனுமதியின்றி ஒருவர் கூண்டுக்குள் சிங்கி இறால் வைத்திருக்கின்றார் என நேற்று முன்தினம் (29) காங்கேசன்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து, அங்கு சென்ற காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பொலிஸார் சிங்கி இறால் வைத்திருந்தவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, மல்லாகம் நீதிமன்ற நீதவான் மேற்படி நபரை ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், அவர் வைத்திருந்த சிங்கி இறால்களை கடலிற்குள் மீண்டும் விடும்படியும் உத்தரவிட்டார்.

ஆதனை தொடர்ந்து கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் முன்னிலையில், காங்கேசன்துறைப் பொலிஸார் சிங்கி இறால்களை கடலில் விட்டனர்.

பெப்ரவரி, செப்ரெம்பர், ஒக்டோபர், ஆகிய மாதங்களில் சிங்கி இறால்கள் இனப்பெருக்கம் செய்வதினால் இம்மாதங்களில் சிங்கி இறால்கள் பிடிப்பதற்கு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .