2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆயுர்வேத வைத்தியர்கள் ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த ஐந்து ஆயுர்வேத வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என சுகாதார வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார். ஆங்கில மருந்து வகைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் ஊர்காவற்துறை, கோப்பாய், சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் பிரதேசங்களிலுள்ள ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் நேற்று புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, கோப்பாய் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள் சிலர் ஆங்கில மருந்து வகைகளைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்து வகைகளை பயன்படுத்திய ஐந்து ஆயுர்வேத வைத்தியர்கள் இனங்காணப்பட்டதுடன் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது ஆயுர்வேத வைத்திய நிலையங்களிலிருந்து பெருமளவிலான ஆங்கில மருந்து வகைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஐந்து ஆயுர்வேத வைத்தியர்களை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .