2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சுற்றுலா பயணிகளின் ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
 
வேலணை மண்கும்பான் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்வதற்கான ஓய்வு மண்டபத்திற்கு இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டு ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.

பொதுசன மக்கள் தொடர்பாடல் அமைச்சின் நிதியுதவியில் நயினாதீவு நாகபூசணி அம்மன் மற்றும் விகாரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்வதற்காக 50 மில்லியன் ரூபா செலவில் 26 அறைகளைக் கொண்டதாக இந்த ஓய்வு மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பொதுசன மக்கள் தொடர்பாடல் அமைச்சின் செயலாளர் எச்.பி.சி.ஹேரத், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், வேலணை பிரதேச செயலார் திருமதி மஞ்சுளதேவி சதீசன், வேலணைப் பிரதேச சபைத் தலைவர் சிவராசா போல் உட்பட அமைச்சின் அதிகாரிகள், கிராம அலுவலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .