2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான கவின் கலை பயிலரங்கு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 11 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


வலிகாமம் கிழக்கு, கோப்பாய் பிரதேச செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான கவின்கலை பயிலரங்கு தொடர்பான செயலமர்வு கோப்பாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.

இக்கவின் கலைக்கு கோப்பாய் பிரதேச கலாசாரப் பிரிவினரால் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட இடைக்காடு மகா வித்தியாலயம், வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயம், கோப்பாய் மகா வித்தியாலயம், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகளிலிருந்து 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பிரதேச செயலகங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் நிதி ஒதுக்கீட்டில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இச்செயற்திட்டம் தொடர்பாக கோப்பாய் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ஆர். மிலாசினி தெரிவிக்கையில்,

'வீடுகளை அலங்கரிப்பதற்காக ஆடம்பரப் பொருட்களை வெளியிலிருந்து கொள்வனவு செய்யாமல் மாணவர்களே தமது வீடுகளை அலங்கரிப்பதற்கு தேவையான கைவினைப் பொருட்களை சுயமாக தயாரிப்பதற்கு பயிற்றுவிக்கப்படுவதுடன்; எதிர்காலத்தில் சுயதொழிலை மேற்கொள்ளவும் இது உதவியாக இருக்கும்' எனவும் தெரிவித்தார். 'இத்திட்டம் ஒவ்வொரு கட்டங்களாக இனி வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .