2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா

வலி.வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் அங்கு இடம்பெறும் வீடழிப்பினை நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை (11) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

காங்கேசன்துறைப் பொலிஸார் வீதித்தடை அமைத்து உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வருபவர்களை விசாரணைகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதுடன், தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .