2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காணாமல் போனவர்களை பதிவு செய்வதற்கான காலம் நீடிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

காணாமல் போனவர்களை பதிவு மேற்கொள்வதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தின் செயற்பாட்டுக் காலத்தின் எல்லை எதிர்வரும் 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயக திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை பதிவு மேற்கொள்ளவதற்கு 2010ஆம் ஆண்டு 19ஆம் இலக்கச் சட்டத்தின் படி ஆரம்பிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி முடிவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் பதிவுகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது இச்சட்டமானது நீடிக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் காணாமல் போனவர்களின் பதிவுகளை மேற்கொள்ளவதற்கு இது உதவியாக அமையும் என பதிவாளர் நாயக திணைக்களத்தினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .