2025 ஜூன் 23, திங்கட்கிழமை

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 28 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை யாழ். நீதிமன்றம் இன்று (28) நிராகரித்தது. சரவணை மேற்கு வேலணைப் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் ஜனகன் (32) என்பவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர் ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி வட்டுவான் முல்லைத்தீவில் வைத்து பயங்கரவாதக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு 4ஆம் மாடியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.

தொடர்ந்து குறித்த சந்தேகநபர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் குற்றஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் யாழ்.மேல் நீதிமன்றில் சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு விசாரணை யாழ். நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, இவரால் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தினை சான்றாக கருத முடியாதென இவர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிபதியிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் மேற்படி வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபரினால் அளிக்கப்பட்ட குற்றஒப்புதல் வாக்குமூலத்தில் முரண்பாடு காணப்படுவதால், அதனைச் சான்றாக கருதமுடியாது  என நீதிபதி அதனை நிராகரித்தார்.

வழக்கில் வேறு சான்றுகள் உள்ளனவா என்பதை பார்ப்பதற்காக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி வரையும் வழக்கினை நீதிபதி ஒத்திவைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .