2025 ஜூன் 23, திங்கட்கிழமை

போதைப் பொருள் விற்ற விற்பனை நிலையங்களுக்கு சீல்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 28 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

போதைப்பொருள் அடங்கிய மருந்து வில்லைகளை விற்பனை செய்த இரு விற்பனை நிலையங்களிற்கு யாழ். நீதிமன்றத்தினால் இன்று (28) சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோலா மற்றும் ஸ்பிரிட் என்ற பெயர்களில் உள்ளடக்கப்பட்ட மருந்து வில்லைகளைப் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமாருக்கு கிடைத்த தகவலினையடுத்து, யாழ். மாநகர சபையின் பிரதம சுகாதார அதிகாரி க.ஆ.ஜீவானந்தனை நீதிமன்றத்திற்கு அழைத்து இந்த போதைப்பொருள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

அதனடிப்படையில், யாழ். பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள வியாபார நிலையங்களில் நேற்று புதன்கிழமை (27) சோதனை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள், அங்கிருந்த போதைப்பொருள் வில்லைகளைக் கைப்பற்றினர்.

அந்த வில்லைகளை தண்ணீரில் கரைத்து குடிக்கும் போது மயக்கம், தலைச்சுற்று ஏற்படுமென்றும், இவற்றினை கோலா, ஸ்பிரிட் என்ற பெயர்களில் விற்பனை செய்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் மேற்படி இரு விற்பனை நிலைய உரிமையாளர்களையும் இன்று வியாழக்கிழமை (28) யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, மேற்படி வில்லைகளை நபர் ஒருவரிடம் கொள்வனவு செய்ததாகவும், அதற்கான பற்றுச்சீட்டினைத் தாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் வியாபார நிலைய உரிமையாளர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த மருந்து வில்லைகளை களுத்துறை உணவுப் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு அனுப்பி பரிசோதனை மேற்கொண்டு நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அதுவரையிலும் மேற்படி இரு வியாபார நிலையங்களையும் சீல் வைக்குமாறும் யாழ்.மாநகரசபை பிரதம பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .