2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மின்மானிகளை சேதப்படுத்திய குடியிருப்பாளர்கள் கைது

Super User   / 2013 டிசெம்பர் 09 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வீட்டு மின் மானிகளினைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் யாழில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்தது.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் சோதனைக் குழுவொன்று யாழ். பிரதேசத்தில் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மின் மானியினைச் சேதப்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இன்று சுன்னாகம் பிரதேசத்தில் சுன்னாகம் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அதே குற்றத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தங்கள் வீட்டு மின்மானியினுள் கம்பிகளைச் செருகி மின்மானியின் வாசிப்பினைக் குறைத்துக் காட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதினாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .