2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். பருத்தித்துறை பிரதேசத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்வொன்று நேற்று (12) மாலை நடைபெற்றது. அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

பருத்தித்துறை அல்வாய் மேற்கு சக்கோட்டை பிரதேச மக்களுக்கு இந்த சுனாமி ஒத்திகை செய்து காட்டப்பட்டது. இந்நிகழ்வில் பருத்தித்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.ஏ.டபிள்யு.அபயகோன், 521 ஆவது படைப்பிரிவின் 7 விஜபா பிரிவின் படையதிகாரி ஏச்.என்.ஜே.எஸ்.பண்டார, பருத்தித்துறை பிரதேச செயலக உபசெயலாளர் உசா தர்மலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .