2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

முதியவர்களுக்கு மேலதிக உதவித்தொகை

Kogilavani   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சினால் 70 வயதை அடைந்த வறிய குடும்பத்தை சேர்ந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபா மாதாந்த உதவிப்பணத்துடன் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுசன மாதாந்த உதவிப்பணமும் வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளரும் முதியோர்களுக்கான தேசிய செயலகப் பணிப்பாளருமான அனுசா கோகுல பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தனை திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும்; கொடுப்பனவை முன்னேற்றகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான செயலமர்வு அநுராதபுரம் தலாவவில் அமைந்துள்ள மத்திய அரசின் சமூகசேவைகள் பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'70 வயதை அடைந்த முதியோரின் ஆதரவற்ற நிலையினையும் வறிய நிலையையும் கருத்தில்கொண்டே இத்தீர்மானத்தை சமூக சேவைகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியிலுள்ள நிலுவைத் தொகையினை விரும்பினால் தமது சொந்த நிதியிலிருந்து வழங்கலாமென அறிவித்திருந்தது.

இந்நிலையில் மேல் மாகாணசபை மட்டும் 2013 ஆம் ஆண்டிலுள்ள நிலுவைத் தொகையினை தனது சொந்த வருமானத்திலிருந்து முதியோர்களுக்கு வழங்கியுள்ளது.

ஏனைய மாகாண சபைகள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இக்கொடுப்பனவைச் செலுத்தும் வகையில் சமூக சேவைகள் அமைச்சால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனவும் 70 வயதை அடைந்த மேலும் ஒரு தொகுதியினருக்கும் மாதாந்தம் 1000 ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .