2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தற்காலிக தொண்டர்களின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழ்.போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்களின் போராட்டம் இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது.  
இந்த போராட்டத்தினால் வைத்தியசாலை நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 வருடங்களாக தற்காலிக ஊழியர்களாகக் கடமையாற்றும் தங்களை விடுத்து, வெளிநபர்களை புதிய நியமனத்தில் இணைத்துக் கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தொண்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் விரைந்து தங்கள் நிரந்தர நியமனத்தினை வழங்குமாறும் கோரிக்கைகள் விடுத்து இந்தப் போராட்டத்தில் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்நாள் போராட்டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தொண்டர்களுடன் சமரசம் பேசியபோதும், அது வெற்றியளிக்காத நிலையில் இன்றும் இந்தப் போராட்டம் தொடர்கின்றது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை விடுதிக்கு கொண்டு செல்லும் பணியை இதுவரை காலமும் தொண்டர்களே மேற்கொண்டு வந்த நிலையில் இந்த இரண்டு நாட்களாக நோயாளர்களின் உறவினர்களே விடுதிகளுக்கு நோயாளிகளைக் கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .