2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ். பொலிஸ் பிரிவுகளில் ஆய்வு

Super User   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகன் கபிலன்


யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்பிலான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் மயூர சமரக்கோன், உளவளத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் யாப்பா ரத்ன மற்றும்  குற்றவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நிரஞ்சி விஜயவர்தன ஆகியோரினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை பேணும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் 10 நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சியொன்றும் கடந்த வாரங்களில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி நெறியின் பின்னர் பொலிஸ் நிலையங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பருத்தித்துறை, பலாலி, வல்வெட்டித்துறை, நெல்லியடி, அச்சுவேலி, தெல்லிப்பளை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளே இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வின் இறுதியில், ஆய்வு குழுவினரினால் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட விரைவுரைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .