2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

கரைச்சி  பிரதேச  செயலர்  பிரிவில்  14  விளையாட்டு கழகங்களுக்கு  விளையாட்டு  உபகரணங்கள்  மற்றும் வறிய குடும்பங்களுக்கு  கோழி  குஞ்சுகள்  வழங்கும்  நிகழ்வு   ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.

கரைச்சி பிரதேச  செயலர்  கோபாலபிள்ளை  நாகேஸ்வரன்  தலைமையில்  நடைபெற்ற   இந்நிகழ்வில்   நாடாளுமன்ற  உறுப்பினரும் நாடாளுமன்ற  குழுக்களின்  பிரதித் தலைவருமாகிய  முருகேசு சந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பொருளாதார  அபிவிருத்தி  அமைச்சின்  திவிநெகும  திட்டத்தின்  கீழ்  கரைச்சி  பிரதேச   செயலர்  பிரிவிலுள்ள  42  கிராம அலுவலர்  பிரிவுகளிலிருந்தும் ஒவ்வொரு வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 30  கோழிக்குஞ்சுகள் வீதம்  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மேலதிக  அரசாங்க  அதிபர்  செல்லமுத்து  ஸ்ரீநிவாசன்,  மாவட்ட  திட்டமிடல்  பணிப்பாளர்  ச.மோகனபவன்,  கரைச்சி  பிரதேச  செயலக  உதவித்திட்டமிடல்  பணிப்பாளர்  அமரசிங்கம்  கேதீஸ்வரன், கரைச்சி உதவி பிரதேச செயலர் சிவகாமி  இராசதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .