2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஊர்காவற்துறையில் ஆணின் சடலம் கரையொதுங்கியது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். ஊர்காவற்துறை கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (16) காலை கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி சடலத்தினை மீட்ட ஊர்காவற்றுறை பொலிஸார் சடலத்தினை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பிலிருந்து கடலுக்குச் சென்ற செல்ரன் பெரேரா (62) என்பவரது சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது என  பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கடலில் ஏற்பட்ட தாழ் காற்றழுத்தத்தினால் இவருடைய படகு கடலில் மூழ்கியதினாலேயே இவர் உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .