2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருடிய ஆட்டை இறைச்சியாக்கி எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்; யாழில் சம்பவம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். சிறுப்பிட்டி பன்னாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் 43 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆடு மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் என்பன நேற்றிரவு (15) திருடப்பட்டுள்ளன.

மேற்படி வீட்டிலுள்ளவர்கள் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த வேளையில், பின்பக்க தோட்டவெளியிலிருந்து வீட்டு வளவுக்குள் நுழைந்தே இத்திருட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டின் கிணற்றடியிலிருந்த ரூபா 15 ஆயிரம் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரத்தினையும், அத்துடன் வீட்டில் கட்டப்பட்டிருந்த 28 ஆயிரம் பெறுமதியாக ஆடு ஒன்றினை வீட்டு வளவுக்குள் வைத்தே வெட்டி இறைச்சியாக்கியும் கொண்டு சென்றுள்ளனர்.

வீட்டிலுள்ளவர்கள் இன்று (16) காலை வீட்டின் பின்புறம் சென்ற வேளையில் வெட்டப்பட்டிருந்த ஆட்டின் சில இறைச்சித்துண்டுகளை கண்டதையடுத்தே ஆடு திருட்டுப்போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .