2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

துவிச்சக்கர வண்டி திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

துவிச்சக்கர வண்டியொன்றை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று திங்கட்கிழமை (16) தெரிவித்தனர்.

குருநகர் தண்ணீர்த் தாங்கி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியொன்று திருடப்பட்டுள்ளதாக துவிச்சக்கர வண்டி உரிமையாளரால் கடந்த முதலாம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்படி துவிச்சக்கர வண்டியை குறித்த இளைஞன் திருடியதாக அவரது நண்பனால் துவிச்சக்கர வண்டி உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக துவிச்சக்கர வண்டி உரிமையாளரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குறித்த இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் விசாரணையின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .