2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

போயா தினத்தில் மதுபானம் விற்ற இருவருக்கு பிணை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற குற்றசாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் இன்று (17) விடுவிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். புத்தூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனும், 52 வயதுடைய முதியவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தூர் மதுபானசாலைக்கு அருகில் வீதியோரமாக குறித்த இருவரும் நேற்றிரவு (16) மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த போது, வாடிக்கையாளர் போல வேடமிட்டுச் சென்ற பொலிஸார் மேற்படி இரு நபர்களையும் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்த  7 மதுபான போத்தல்களையும் கைப்பற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .