2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யும் ச.தொ.ச

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்ட விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்குகளை ச.தொ.ச கூட்டுறவு விற்பனை நிலையம் உரிய விலை கொடுத்து கொள்வனவு செய்வதாக யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்ட உருளைக் கிழங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் நன்கு திட்டமிட்ட முறையில் யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இருந்தும் இவற்றினை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுதல் மற்றும் தென்னிலங்கை உருளைக் கிழங்குகளின் வருகையினால் உள்ளூர் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த முடியாது விவசாயிகள் சிரமப்பட்டனர்.

இந்நிலையிலேயே யாழ். மாவட்ட உருளைக் கிழங்குகளை சதோச நிறுவனம் கொள்வனவு செய்கின்றமையினால் யாழ். மாவட்ட உருளைக் கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .