2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'மனிதம் வெல்லும்' என்ற தொனிப்பொருளில் நெல்சன் மண்டேலாவின் நினைவு பகிர்வு

Super User   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தென்னாபிரிக்காவின் முன்னாள், மறைந்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்காக 'மனிதம் வெல்லும்' என்ற தொனிப்பொருளிலான நினைவுப் பகிர்வொன்று நேற்று செய்வாய்கிழமை இடம்பெற்றது.

யாழ். சமூக செயற்பாட்டு மையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் அவ்வமைப்பின் இணைப்பாளர் எஸ். சுகிர்தராஜ் தலைமையில் நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைக் குறிப்பு அடங்கிய ஆவணப்படம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டதோடு அவரது போராட்ட வரலாறு, தென்னாபிரிக்காவின் விடுதலை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன.

'உலக சமாதானமும் நெல்சன் மண்டேலாவும்' என்னும் தலைப்பில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான கலையகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ஜெ.கமலநாதன் நினைவுப் பேருரையொன்றினை வழங்கினார். இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், அருட் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .