2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சி.வி- வடக்கு உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் சந்திப்பு

Super User   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பிரதேச மட்ட அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்கு முறைகள், உள்ளூராட்சி மன்றங்களிற்கான சட்ட அமுலாக்கல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

இதில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின்  தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .