2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காங்கேசன்துறை  கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

இராமேஸ்வரம் பகுதியிலிருந்து ஒரு படகில் வந்த 6 மீனவர்களும் புதுக்கோட்டை ஜனதா பட்டினம் பகுதியிலிருந்து 6 படகுகளிலிருந்து வந்த 24 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 05 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி, 30 மீனவர்களின் வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (20) மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்காத பட்சத்தில் 2014ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி வரை குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .