2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வைத்தியர் இன்மையால் நெடுந்தீவு மக்கள் அவதி

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யு.நாதன்

நெடுந்தீவு வைத்தியசாலை கடந்த 2 வாரங்களாக வைத்தியர்  இல்லாமல் இயங்கி வருவதால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

வைத்தியர் இன்மையால் சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் இதனால், நேரம், பணம் என்பன அதிகமாக செலவு செய்யப்படுவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் சுழற்சி முறையில் கடமையாற்றி வந்தனர்.  இருந்தும் கடந்த இரண்டு வாரங்களாக மேற்படி வைத்தியர்கள் அங்கு கடமைக்கு வரவில்லை.

தற்போது மேற்படி வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்களில்  ஒருவர் சாதாரண நோய்களுக்கு மட்டும் மருந்துகள் வழங்கி வருகின்றார்.

அத்துடன், நோயாளர்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கான அம்புலன்ஸ் படகும் சேதமடைந்திருப்பதினால், நோயாளர்கள் கடற்படையினரின் படகுகளிலும், மீனவர்களின் படகுகளிலுமே குறிகட்டுவான் கரைக்கு கொண்டு வரப்பட்டு, அம்புலன்ஸ் வண்டிகள் மூலம்; யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .