2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அச்சுவேலியில் வாழைக்குலைகள் திருட்டு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். அச்சுவேலித் தெற்குப் பகுதியிலுள்ள வாழைத்தோட்டமொன்றிலிருந்து 10 இற்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு திருடிக்கொண்டு செல்லப்பட்டுள்ளன.

குறித்த வாழைத்தோட்டத்திற்குள் நுழைந்த திருடர்கள்  அங்கிருந்த வாழைமரங்களை சரமாரியாக வெட்டிச் சாய்த்து நாசம் செய்துள்ளதுடன், 10 இற்கும் மேற்பட்ட வாழைக்குலைகளையும் திருடிக்கொண்டு சென்றுள்ளனர். 

சுமார் 5,000 ரூபா பெறுமதியான வாழைக்குலைகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளன.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில்  வாழைத்தோட்ட உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அச்சுவேலி, ஈவினை, புன்னாலைக்கட்டுவான் ஆகிய பகுதிகளில் இரவு வேளைகளில் அடிக்கடி வாழைக்குலைகள் திருட்டுப் போவதாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் கிடைப்பதாகவும்  இவ்வாறான வாழைக்குலை திருட்டுச் சம்பவமொன்றில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .