2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கஜமுத்துக்களை விற்கமுயன்ற மூவர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யானைத் தந்தத்தின் முத்துக்களை (கஜமுத்து) விற்பனை செய்ய முயன்ற இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரி கஸ்தூரியாராச்சி இன்று (23) தெரிவித்தார்.

குறித்த இளைஞர்கள் யானைத் தந்தத்தின் முத்துக்களை மல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் விற்பனை செய்ய முயன்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பகுதியிலுள்ள ஒருவரிடம் 5 இலட்சம் ரூபா கொடுத்து இம்முத்துக்களை கொள்முதல் செய்ததாகத் அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .