2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கிருஷ்ணன்

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இலங்கைப் போக்குவரத்து சபைப் பேரூந்து மோதியதில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம், வெள்ளாம் போக்கடியைச் சேர்ந்த சின்னம்பு அருளம்பு (73) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சாவகச்சேரி சந்தையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த குறித்த வயோதிபரை பின்னால் வந்த இலங்கைப் போக்குவரத்து சபைப் பேரூந்து மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவரின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .