2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிசுவின் சடலம் மீட்பு; பெண் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். உரும்பிராய் பகுதியில்  சிசுவொன்றின்  சடலம் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணொருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பெண் வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக செல்லும்போது சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். உரும்பிராய் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சிசுவொன்றின் சடலம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. இச்சிசு எரிக்கப்பட்டு பின்னர் உரைப்பையினுள் சுற்றி குழிவெட்டி நிலத்தில்  புதைக்கப்பட்டிருந்தது.

உரைப்பையில் இடப்பட்டு கட்டப்பட்டவாறு காணப்பட்ட இச்சிசுவின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்.  நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சறோஜினி இளங்கோவன் முன்னிலையில்  இச்சிசுவின் சடலம்   மீட்கப்பட்டு பிரேத  பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

மேலும், தனது கணவர் அவுஸ்திரேலியாவில் பணிபுரிவதாகவும் தானும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக படகில் சென்றபோது அப்படகு விபத்துக்குள்ளாகி இந்தோனேசியாவில் கரையொதுங்கியது. அங்கு எமது படகு முகவருடன் ஏற்பட்ட தொடர்பு  காரணமாக தான் கர்ப்பமடைந்ததாக இப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


தொடர்புடைய செய்தி


உரும்பிராயில் சிசுவின் சடலம் மீட்பு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .