2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ் நங்கையின் உருவச்சிலை மாநகர சபை வளாகத்தில் திறப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்.மாநகர சபை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.நங்கையின் உருவச்சிலை செவ்வாய்க்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையினால் 25000 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த உருவச்சிலையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

யாழ்.மாநகர சபையினால் 25,000 ரூபா நிதிச் செலவில் இந்தச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை அமைப்பதற்கு மூலப்பொருட் செலவு மட்டும் ஏற்பட்டதாகவும் சிலை வடிவமைக்கும் வேலைகளை மாநகர சபை ஊழியர்கள் மேற்கொண்டதாகவும் யாழ்.மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .