2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மர்மபொருள் வெடித்ததில் சிறுவன் படுகாயம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து முல்லைத்தீவு முள்ளியவளை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இதில், செல்வராசா சுதாகரன் (06) என்ற சிறுவனே படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி பிரதேசத்தில் பயிர்ச் செய்கைக்காக நிலத்தை உழவு இயந்திரத்தின் மூலம் பன்படுத்திய போது மர்மப்பொருள் ஒன்று நிலத்திலிருந்து வெளியில் வந்தது. இதன்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மேற்படி சிறுவன் அம்மர்மப்பொருளை எடுத்தபோது அது வெடித்துள்ளது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு, முள்ளியவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .