2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

முதலமைச்சரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரிய சுகாதாரத் தொண்டர்கள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்காக சுகாதாரத் தொண்டர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்திலுள்ள பொது சுகாதார பணிமனைகளின் கீழ் பணியாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் கடந்த வியாழக்கிழமை (19) திகதி முதல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

15 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரியும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனக் கூறியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இருந்தும், சுகாதார சேவைகள் சிற்றுழியர்களுக்கான வெற்றிடங்கள் தற்போது இல்லையெனவும், அதற்கான வெற்றிடங்கள் காணப்படும் இடத்து நீங்கள் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதனால் சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் கைவிடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்தே மேற்படி தொண்டர்கள் தாங்கள் வடமாகாண முதலமைச்சரைத் சந்திப்பதற்கு விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கோரியுள்ளனர்.

அத்துடன், முதலமைச்சரைச் சந்திக்கும் போது தாம் மகஜர் ஒன்றினை முதலமைச்சருக்கு வழங்கவுள்ளதாகவும் சுகாதாரத் தொண்டர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .