2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

கடலாமை இறைச்சி விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடலாமை இறைச்சி விற்பனை செய்ததாகக் கூறப்படும்  ஒருவரை  நேற்று புதன்கிழமை (25) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவரிடமிருந்து 3 கிலோகிராம் கடலாமை இறைச்சியையும் கைப்பற்றியுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரி எஸ்.ஐ.ரோகண  தெரிவித்தார்.

அச்சுவேலி, தோப்புப் பகுதியைச் சேர்ந்த வள்ளிபுரம் தம்பிராசா (வயது 58) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி, பத்தமேனிப் பகுதியில் கடலாமை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .