2025 ஜூன் 25, புதன்கிழமை

வலி. கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்

Super User   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


வலி. கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்று வருகின்றது.

புத்தூர் சந்தையிலுள்ள மாட்டிறைச்சி கடை கேள்வி கோரலில் ஏற்பட்ட குளறுபடியினை எதிர்த்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி சந்தையினை 194,000 ரூபா மேற்பட்ட கேள்வித் தொகைக்கு கொடுப்பதாக பிரதேச சபையில் தீர்மானம் மேற்கொண்டு பகிரங்க கேள்வி அறிவித்தல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.

இதன்போது கேள்வித் தொகைகளினை நிரப்பி அனுப்பியவர்களில் 450,000 ரூபா கேள்வித் தொகையினை கோரியவர்களினை விடுத்து, 196,000 ரூபா கேள்வித் தொகை கோரியவருக்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 450,000 ரூபா கேள்வி கோரியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .