2025 ஜூன் 25, புதன்கிழமை

கோணப்புலம் நலன்புரி நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Kogilavani   / 2014 ஜனவரி 02 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


வலி.வடக்கு மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் வறிய மாணவர்களுக்கு வலி.வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் புதன்கிழமை (01) வழங்கப்பட்டுள்ளன.

வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நலன்புரி நிலையத்திலிருந்த 75 குடும்பங்களைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்,

'மயிலிட்டி, தையிட்டி, பலாலி போன்ற இடங்களிலிருந்து 24 வருடங்களுக்கு முன்னர் இடம்;பெயர்ந்த மக்களே தற்போது கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் ஜீவனோபாயத் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமையினால், இவர்கள் கஷ்டங்களுக்கு மத்தியில் தமது வாழ்க்கையினைக் கொண்டு நடத்துகின்றனர்.

இவர்கள், தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனால், வலி.வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான லயன் சி.ஹரிகரன், வ.முருகேசு மற்றும் சமூகசேவகர் இராஜதுரை ஆகியோரின் நிதியுதவியுடன் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டதாக பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனும் கலந்துகொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .