2025 ஜூன் 25, புதன்கிழமை

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 02 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


சங்குவேலி ஸ்ரீ காளியம்பாள் சனசமூக நிலைய போரூட் சேமிப்புத் திட்ட சேமிப்பாளர்களின் பிள்ளைகளுக்கும் சனசமூக நிலைய அங்கத்தவர்களின் தரம் 5 இல் சித்தியடைந்த பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு சனசமூக நிலைய போஷகர் இ.சிவநாயகம் தலைமையில், நிலைய முன்றலில் நேற்று (01) நடைபெற்றது.

போரூட் சேமிப்புத் திட்டத்தில் சேமிக்கப்பட்ட பணத்திற்கு கிடைத்த வட்டிப் பணத்திலிருந்து கற்றல் உபகரணங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக நிர்வாகக் கிராமஅலுவலர் நா.நவரத்தினராசா, மானிப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பி.ஆனந்தா, வலி.தெற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தேவராஜன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .