2025 ஜூன் 25, புதன்கிழமை

கொள்ளைக் குழுவினரை சேர்ந்த இளைஞருக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2014 ஜனவரி 03 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்
 
அக்கரைப்பபற்று பிரதேசத்தில் வாடகைக்கு வான் ஒன்றை பெற்று, பல கொள்ளைச் சம்பவங்களில் நீண்டகாலமாக ஈடுபட்டவந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி யு.எல்.எம்.அஹ்கர் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
 
இக் கொள்ளைக் குழுவினரைச் சேர்ந்த 4 பேரை கடந்த 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இக் கொள்ளைக் குழுவின் பொத்துவிலைச் சேர்ந்த 20 வயது இளைஞரை 30ஆம் திகதி திங்கட்கிழமை பொத்துவிலில் வைத்து கைது செய்து நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி யு.எல்.எம்.அஹ்கர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது மேற்படி உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். 
 
அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேருமாக 5 பேர்கொண்ட குழுவினர்கள் வாடகைக்கு வாகனங்களை வழங்கிவரும் இடங்களில் வாகனங்களை பெற்று ஆடு, மாடு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டுவந்துள்ள நிலையில் கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை அக்கரைப்பற்றில் வாடகைக்கு வாகனங்களை வழங்கிவரும் ஹாஜியார் ஒருவரிடம் வான் ஒன்றை வாடகைக்கு பெற்றுள்ளனர். இதன் பின்னர்  அவர்கள் தொடர்பாக ஹாஜியாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அன்றைய தினம் வானை வாடகைக்கு எடுத்துச் சென்ற இருவரை கைது செய்ததுடன் வானையும் கைப்பற்றியதன் பின்னர் பொலிஸாரின் விசாரணையில் 5 பேர் கொண்ட குழவினராக வாடகைக்கு சாரதியில்லாமல் வான் மற்றும் கார் என்பவற்றை பெற்று பொத்துவில், அக்கரைப்பற்று பிரதேசங்களில் வீதிக்கருகாமையால் வரும் ஆடுகள் மாடுகளை ஆள் நடமாற்றம் இல்லாதபோது திருடி வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றிக் கொண்டு சென்று சம்மாந்துறை, அக்கரைப்பற்று பொத்துவில் போன்ற பிரதேசங்களில் விற்பனை செய்துள்ளதாகவும், கோளாவில் பிரதேசத்தில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்திச் சென்றமை மற்றும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துவிச்சக்கரவண்டி ஒன்றும் கையடக்க தொலைபேசி 4 மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய வாடகை வான் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .