2025 ஜூன் 25, புதன்கிழமை

கைத்தொலைபேசி திருடியவரும் அதனை வாங்கியவரும் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.இடைக்காடு தம்பாளைப் பகுதியிலுள்ள வீடொன்றில் கைத்தொலைபேசியினை திருடிய நபரும், திருடியவரிடமிருந்து கைத்தொலைபேசியினைக் கொள்வனவு செய்த நபரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி.நிஸங்க தெரிவித்தார்.

மேற்படி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியொன்று திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த வீட்டின் வயோபதிபர் ஒருவரினால் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி குற்ற ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

தொலைபேசியின் ஜி.பி.எஸ்.தொழில்நுட்பம், மற்றும் தொலைத்தொடர்பு நிலையம் ஆகியவற்றின் உதவியுடன் மேற்படி தொலைபேசியினை வைத்திருந்த தம்பாளைச் சேர்ந்த இளைஞரை அச்சுவேலிப் பொலிஸார் நேற்று (03) மாலை கைது செய்தனர்.

தொடர்ந்து மேற்படி நபரை விசாரணை செய்த போது, குறித்த நபர் இந்தத் கைத்தொலைபேசியினை நண்பர் ஒருவரிடம் வாங்கியதாகச் பொலிஸில் தெரிவித்தார். இதன் பிரகாரம் அதே இடத்தினைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞனையும் பொலிஸார் கைது செய்தனர்.

மேற்படி இரு இளைஞர்களும் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .