2025 ஜூன் 25, புதன்கிழமை

தண்டவாளங்களை கடத்த முயன்றவர் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 10 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான தண்டவாளங்களை லொறியில் ஏற்றி செல்ல முற்பட்ட சாரதியை கைதுசெய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.ஜே.வன்னியாராய்ச்சி இன்று தெரிவித்தார்.

சாவகச்சேரி நுணாவில் கிழக்கு வைரசுவாமி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக முன்னர் இராணுவ முகாம் இருந்த காணியில் இருந்து பழைய தண்டவாளங்கள் மற்றும் பழைய தகரங்களை இனம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை லொறி ஒன்றில் ஏற்றி புறப்படும் வேளையில் பாரமிகுதியால் லொறியின் சில்லு நிலத்திற்குள் புதையுண்டது.

தொடர்ந்து மேற்படி நபர்கள் புதையுண்ட லொறியை வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த வேளை அப்பகுதியால் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரைக் கண்டவுடன் சாரதி விட்டுவிட்டு ஏனைய நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

பொலிஸார் சாரதியை கைதுசெய்ததுடன், குறித்த வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துசென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .