2025 ஜூன் 25, புதன்கிழமை

நீர்வேலி கைத்தொழில் சங்க உற்பத்திகள் தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2014 ஜனவரி 11 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் தொழிற்துறை நடவடிக்கைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நீர்வேலி, கைத்தொழில் சங்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது.

இதன்பிரகாரம் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் கொள்வனவு, உற்பத்திகள், அவற்றுக்கான சந்தைவாய்ப்பு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்திய அமைச்சர் மூலப்பொருட்களை சங்கத்தின் ஊடாக உற்பத்தியாளர்களுக்கு வழங்கி உற்பத்திகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இதன்போது உற்பத்திகள் நவீன தரத்திற்கும் அவற்றின் சந்தை வாய்ப்பிற்கும் ஏற்ற விதமாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்; மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், தொழிலாளர்களது ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதில் கைத்தொழில் அபிவிருத்தி சபை பிரதிப் பணிப்பாளர் சிவகெங்காதரன், காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத் தலைவர் பத்மநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .