2025 ஜூன் 25, புதன்கிழமை

பனங்கள்ளுக்கு பதிலாக பதநீர் உற்பத்தி செய்யப்படும்: அருணகிரிநாதன்

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தெல்லிப்பழை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினால் இந்த ஆண்டு (2014) முதல் பனங்கள்ளிற்கு பதிலாக கருப்பனி என்று அழைக்கப்படும் பதநீரை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சங்கத் தலைவர் க.அருணகிரிநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கள்ளில் கீரிமலை கூவில் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் 'கள்' மற்றும் 'பனம்கட்டி' என்பன தமிழ் மக்கள் மட்டுமன்றி தென்னிலங்கை மக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோரிடையே பிரபல்யமான தொன்று. கீரிமலை கள்ளினைத் தேடிச் சென்று ருசி பார்ப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.

இருந்தும், கடந்த கால யுத்தத்தினால் 23 வருடங்களாக 'கள்' உற்பத்தி இந்தப் பிரதேசத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கள சார்ந்த உற்பத்திகளும் குறைந்தளNவு மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அண்மையில் இப்பிரதேச மக்கள் அவர்களின் பிரதேசங்களில் மீளக்குடியேற்ற அனுமதிக்கப்பட்ட பின்னர் தங்கள் ஜீவனோபாயத் தொழிலான பனை தென்னை சார்ந்த உற்பத்திகளில் அதிகம் நாட்டம் காட்டிவருகின்றனர். அதற்கான ஆலோசனைகளை வழங்கும்படி தெல்லிப்பழை பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்திடமும் கேட்டிருந்தனர்.

இதனால், அங்கு மீளக்குடியேறிவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையில் சங்கம் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் இந்தப் பிரதேசங்களில் கிடைக்கும் வளங்களைக் கொண்டு பதநீர் உற்பத்தி செய்து அதனை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சங்கம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .