2025 ஜூன் 25, புதன்கிழமை

புதிய மின் பாவனையாளர் சேவை நிலையம் திறப்பு

Super User   / 2014 ஜனவரி 16 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பருத்தித்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின் பாவனையாளர் சேவை நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திறந்துவைத்தார்.

கல்லூரி வீதி பருத்தித்துறை எனும் முகவரியிலுள்ள இந்த மின் பாவனையாளர் சேவை நிலையத்தின் மூலம் வடமராட்சி பிரதேசத்தினை சேர்ந்த கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவர்.

இந்த திறப்பு விழாவில் இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளரும் பொறியியலாளருமான யூ.கே.டபிள்யு சில்வா,  வட மாகாண பிரதிப் பொது முகாமையாளரும் மின் பொறியியலாளருமான குணதிலக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .