2025 ஜூன் 25, புதன்கிழமை

த ஏசியன் பவுண்டேசன் அதிகாரிகள் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 21 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


த ஏசியன் பவுண்டேசன் நிறைவேற்று அதிகாரி பி.எச்.ஆர். மகோர்ஸ் மற்றும் அவரது குழுவினர் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடினர்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, வடமாகாணத்திலுள்ள நிலவரங்கள் மற்றும் ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தினால் யாழ்.மாவட்டத்திற்கு வழங்கும் உதவித்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.

இச்சந்திப்பில் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .