2025 ஜூன் 25, புதன்கிழமை

தம்பிராசாவின் உண்ணாவிரதம் நிறைவு; சுரேஸ் எம்.பி முடித்து வைத்தார்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 22 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, சொர்ணகுமார் சொரூபன்

அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசாவினால் கடந்த வியாழக்கிழமை (16) முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை நேற்று (21), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குளிர்பானம் கொடுத்து முடித்து வைத்தார்.

தம்பிராசா இந்த உண்ணாவிரப் போராட்டத்தினை மூன்றாவது முறையாக முன்னெடுத்து வந்ததுடன், இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 11ஆம் திகதி ஆரம்பித்த முதலாவது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் இரண்டு நாட்களில் நிறைவு செய்துகொண்டார்.

இதேவேளை, வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒக்டோபர் மாதம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தையுமட நான்கு நாட்களில் நிறைவு செய்து கொண்டார்.

தொடர்ந்து வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த வலியுறுத்தியும் இடம்பெயர்ந்த மக்களுக்கு இடைநிறுத்தப்பட்ட நிவாரணத்தை வழங்கக் கோரியும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த 16ஆம் திகதி முதல் மூன்றாவது தடவையாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் உண்ணாவிரப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை இவர் மீது இனந்தெரியாத நபர்கள் கழிவு எண்ணெய் வீசி தாக்குதலினை மேற்கொண்டிருந்தனர்.

தொடர்ந்து அடிக்கடி வீதியினால் பொல்லுகள், வாள்களுடன் இனந்தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும், இவர் தனியாக இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதினால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்படி, இவ்வாறான போராட்டங்களை இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் சேர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்து, இந்த போராட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரமேச்சந்திரன் தம்பிராசாவைக் குளிர்பானம் அருந்த வைத்து முடித்து வைத்தார்.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர்களாக எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .