2025 ஜூன் 25, புதன்கிழமை

'ஜில்லா'வுக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 22 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான 'ஜில்லா' திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அத்திரைப்படம் தொடர்பில் வெளியான விமர்சனத்தைக் கண்டித்தும் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நடிகர் விஜயின் ரசிகர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், இலங்கைத் தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் சினிமா நடிகர் ஒருவருக்கு ஆதரவாகப் போராடுவதா என்று ஆர்ப்பாட்டக்காரர்களை வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், விரட்டியடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திரைப்படத்துக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகையொன்றில் விமர்சனமொன்று எழுதப்பட்டிருந்தது. இந்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குறித்த பத்திரிகை நிறுவனத்தின் முன்னால் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதன்போது, அங்கு வந்துள்ள வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், 'தமிழர்கள் மத்தியில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்க நீங்கள் இதற்கெல்லாம் போராட்டம் நடத்துகின்றீர்களே!, எங்கள் மக்களுக்காக நடைபெற்ற இத்தனை போராட்டங்களில் எவற்றில் நீங்கள் கலந்துகொண்டீரர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

"நடிகரின் கட்டவுட்டிற்கு பால் ஊற்றுதல் கோஷங்கள் போடுதல் என்று உங்கள் காலங்களை வீணடிக்கின்றீர்கள். உங்கள் எதிர்காலம் பற்றி நீங்கள் சிந்திக்காமல் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றீர்கள். இங்கிருந்து நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் எனக்கூறி இங்கிருந்து அகன்று செல்லுங்கள்  என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சாடியுள்ளார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து கலைந்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Wednesday, 22 January 2014 02:53 PM

    பொய்யான கற்பனைக் காட்சிகளையும், மாயாஜால வீரத்தனங்களையும் நிஜமென மயங்கும் மக்களே உங்களால் கோடிகளை சம்பாதிக்கிறார்களே... உங்கள் சமூகத்துக்கு இவர்களால் என்ன பயன்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .