2025 ஜூன் 25, புதன்கிழமை

கமலேந்திரனுக்கு வடமாகாண சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதி

Kanagaraj   / 2014 ஜனவரி 23 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன்  கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளார்.

அத்துடன், கமலேந்திரன், றெக்ஷசனின் மனைவி மற்றும் இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஜசிந்தன் என்ற இளைஞன் ஆகியோரை பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கமலேந்திரன் மற்றும் றெக்ஷpசனின் மனைவி சார்பாக சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.

கமலேந்திரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது தரப்பைச்சேர்ந்தவரை, வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்குமாறு மன்றில் கோரிநின்றார்.

இதற்கு பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 'பொலிஸார் பாதுகாப்பு வழங்கும் பட்சத்தில் கமலேந்திரனை வடமாகாண சபைக்கு அழைத்துச் சென்று வருவோம்' என சிறைச்சாலை பொறுப்பதிகாரி இதன்போது மன்றில் தெரிவித்தார்.

இதற்கமைய கமலேந்திரனை வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்குவதாகவும் அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸார் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தினையும் செய்வார்கள் என நீதவான் தெரிவித்தார்.
வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான இளைஞன் சார்பாக எந்தச் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷpசன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் கமலேந்திரனை டிசம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததுடன், றெக்ஷpசனின் மனைவி மற்றும் மற்றுமொரு இளைஞன் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .