2025 ஜூன் 25, புதன்கிழமை

கணினி மயப்படுத்தப்பட்ட ஆதனவரி பகுதி, இணையத்தளம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா


வலி.தெற்கு பிரதேச சபையின் சபையின் கணினி மயப்படுத்தப்பட்ட ஆதனவரி பகுதி மற்றும் இணையத்தளம் என்பவற்றை வியாழக்கிழமை (23) வலி.தெற்கு பிரதேச சபையின் சபையின் உள்ளூராட்சி வார பரிசளிப்பு நிகழ்வில் வைத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாமிடம் பெற்ற ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய மாணவன் ப.தனுராஜ், கல்விப் பொதுத்தராதரப் பரீட்சை உயர்தரப் பரீட்சையில் 3ஏ பெற்ற வாழ்வக மாணவன் தர்மதன் (விழிப்புலனற்றவர்), மற்றும் பிரதேச சபைத் தலைமைக் கட்டிடம் அமையப்பெற்றுள்ள காணியினை அன்பளிப்புச் செய்த நல்லதம்பி பொன்னுத்துரை ஆகியோருக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டன.

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு மேற்படி சபையினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன், அரியகுட்டி பரஞ்சோதி, கந்தையா சர்வேஸ்வரன், சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .